<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-30723530</id><updated>2011-04-21T20:51:59.027-07:00</updated><title type='text'>சிதறல்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://chithaivu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30723530/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://chithaivu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>muthu_r</name><uri>http://www.blogger.com/profile/13312349951563352504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>3</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-30723530.post-115970284031603324</id><published>2006-10-01T04:38:00.000-07:00</published><updated>2006-10-23T20:30:38.566-07:00</updated><title type='text'>ராஜமார்த்தாண்டனுக்கு திருநெல்வேலி கோயில் ராஜ் கடிதம்</title><content type='html'>நூல்: அப்படியே நிற்கட்டும் அந்த மரம்&lt;br /&gt;ஆசிரியர்: ராஜமார்த்தாண்டன்&lt;br /&gt;ராஜமார்த்தாண்டனுக்கு திருநெல்வேலி கோயில் ராஜ் கடிதம்&lt;br /&gt;அன்புள்ள அண்ணாச்சிக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்ல அவ்வளவு பேர் செத்துப் போனப்புறம், கவிதைப் பத்தி பேச, படிக்க கொஞ்சம் பிரச்னையாத்தாங்க இருக்கு. ஆனா எழுத ஒண்ணும் பிரச்னை இல்ல போல இருக்குங்க. இருக்க இடங்கிடச்சுருச்சுன்னு, உயர உயரமா கட்டடத்த கட்டினாங்க அண்ணாச்சி, பூமா தேவி பாரந்தாங்காம பொங்கி எழுந்து ஓஞ்சுட்டாங்க. அதுபோலதாங்க பேப்பர் கிடச்சுடுச்சுன்னு எல்லாரும் எழுத ஆரம்புச்சுடுறாங்க. மரத்த அழிச்சுதாங்க பேப்பர் செய்றாங்க, நாம அதே பேப்பர்லயே `மரம்' அழிஞ்சுட்டிருக்குன்னு வருத்தப்படறோங்க என்ன செய்றது அண்ணாச்சி - பூமி மாதிரி ஒரு நாள் மரங்களுக்கு கோவம் வந்துச்சுன்னு வச்சுக்குங்க, அது கவிஞர் - நியூஸ் பேப்பர் ஆசாமின்னு பிரிச்சு பாக்காதுங்க, மரத்த வெட்டி பொழப்பு நடத்துறவன தேவதேவன் அண்ணாச்சி திட்றாருங்க, ஆனா அந்த பொழப்புல நமக்கும் பங்கு இருக்குங்க; மரம் தன்ன அழிச்சுட்டாங்களேன்னு கோபப்படறதவிட, அழிச்சதுக்காக புலம்பி கவித எழுதறவங்களக்கண்டா அதிக கோபப்படும்னு எங்க தாத்தா தாமோதர ஆசான் சொல்லியிருக்காங்க தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியால இப்ப குழந்த பொறக்கற எண்ணிக்கையை விட கவித பொறக்கற எண்ணிக்கை அதிகமாயிடுச்சுன்னு தோணுது, இந்த ரேட்ல போச்சுன்னா தாங்காதுன்னு தோணுது அண்ணாச்சி! சரி நாம கவித பத்தி பேச ஆரம்பிப்போங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைக்கு `பித்து' புடிக்கணும்னு ஜெயமோகன் சார் சொன்னதா நீங்க சொல்றீங்க ஆனா, ஏற்கனவே நிறைய பித்து புடிச்சுப் போயிடுச்சுங்க, இந்த பித்த ஓட்டறதுக்கு யாராவது மந்திரவாதி கெடச்சா கூட பரவால்லங்க. அப்படியும் ஒரு மந்திரவாதி பத்தாதுன்னு தோணுது அண்ணாச்சி. நீங்க என்ன சொல்றீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;`எல்லாமே நம்பிக்கையில் தான்' னு ஒரு கவித எழுதியிருக்கீங்க, இதே போல ஒரு கவித பசுவையா அண்ணாச்சி எழுதியிருக்காருங்களே. `யாரோ ஒருவனுக்காக' ங்கற கவிததாங்க அது. அதுல அவரு யாரோ ஒருவருக்காக காத்திருக்காருங்க, ஆனா நீங்க எங்க கண், காது, எங்க வாரிசு எல்லாத்தையும்ல இதுல போட்டு இழுக்கிறீங்க! இது நியாயமா அண்ணாச்சி, எங்க தலை எழுத்துதான் கவித படிக்க வச்சுடுச்சு, அவங்க தலைஎழுத்துமாங்க அப்டி இருக்கணும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க . . `சுதந்திரம்' னு ஒரு கவிதயும் பசுவையா அண்ணாச்சி கவிதய ஞாபகப் படுத்துதுங்க. நீங்கள்ளாம் பாமரங்க ரசிக்கற கவிதய பிரச்சாரமா இருக்குன்னு, ஒதுக்குறீங்க, ஆனா `சுதந்திரம்' கவித மட்டும் என்ன பெரிய உன்னத பிரசாரமாங்க? நான் கேக்கலீங்க, எங்க பக்கத்துல இருக்கற `கவியரசு' பித்தன் கேக்கறாருங்க. கோச்சுக்காதீங்க, நீங்க புதுமைப்பித்தன் - ரசிகர் மன்றம் வச்சுருக்கீங்க - அவுங்க கவியரசு - ரசிகர் மன்றம் வச்சுருக்காங்க. என்ன வித்யாசம்னு கேட்டா, வாழ்வு, சாளரம், உன்னதம், தரிசனம்னு என்னன்னமோ புரியாத வெஷயத்த எங்க தலைல கொண்டு போடுறீங்கன்னு - மறுபடியும் நான் கேக்லீங்க எங்க ஊரு கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்ற தலைவரு கேக்காருங்க. அவுங்கள விடுங்க அண்ணாச்சி, அவுகளுக்கு வேறவேல கெடையாது, இது மாதிரிதான் பதில்சொல்ல முடியாத கேள்வியெல்லாம் ஒங்க கிட்ட கேப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;`பார்வையாளனின் சோகம்' - ங்கற கவித தலைப்பே தப்பா இருக்குங்க. கவிதைல நீங்க சொன்னது ஆக்ஸிடென்ட்ல செத்துப் போனவன பத்திங்கறத மறந்து பாக்கற கவிஞனோட சோகங்கற மாதிரி ஆயிடுச்சே எப்டி அண்ணாச்சி, செத்துப் போனவனோட சொந்தக்காரங்க சோகமும் ஒங்க சோகமும் ஒண்ணாகும். `வால்மனிதன்' - கவித ஒரு தமாசு கவிதங்க சொல்றேன்னு கோச்சுக்காதீங்க, 1999-ல எழுதியிருக்கீங்க அந்த கவிதய ஆனா ரொம்ப நாள் முன்னாடியே `வால் பையன்'- னு ஒரு டிராமா எஸ்.வீ. சேகர் போட்டுருக்காருங்க. வால் முளக்கிறத நக்கல் பண்ணியிருக்காருங்க அந்த நாடகத்துல, சேகரண்ணாச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போதெல்லாம் அரிதாகி வருகின்றன/ வாலில்லாமல் அவன் நடமாடும் கணங்கள்"அப்டீன்னு முடிச்சுருக்கீங்க நாடகத்துலயும் சேகரோட கவல அதாங்க என்ன பண்றதுங்க நீங்க காமெடிக் கவிஞனாயிட்டீங்க, சேகர் `தேடல்' கலைஞனாயிட்டாருங்க. அப்பிடீன்னு நான் சொல்லல அண்ணாச்சி, எங்க வீட்டு கிளி சொன்னுச்சுங்க. அப்புறம் உங்க `மனப்பறவை' கிட்ட சொல்லி நான் எழுதிக்கிட்டுருக்கும் போதே ஒங்க புஸ்தகத்த இழுத்துக்கிட்டு போன எலியக்கண்டுபிடிச்சு, புஸ்தகத்த புடுங்கிட்டு வரச் சொல்லுங்க அண்ணாச்சி ஏன்னா, அழுதுட்ருக்கற குழந்தைக்கு கொய்யாப்பழம் கொடுத்த வள்ளல் பறவையாச்சுதுங்களே ஒங்களோட `மனப்பறவை'. தயவு செஞ்சு இந்த மாதிரி கவிதங்கள எழுதாதீங்க அண்ணாச்சி. தெரியாம படிச்சுட்டு, எங்கப்பா என்ன போட்டு அடிக்கறாருங்க. இதயும் முடிஞ்சா ஒங்க மனப்பறவகிட்ட சொல்லுங்க அண்ணாச்சி - நேர்ல வந்து சொல்லுங்க - மறுபடியும் கவித மூலமா சொல்லாதீங்க அடிவாங்க என் உடம்புல தெம்பு இல்ல அண்ணாச்சி;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப்பறவையும் மேல பறந்தாலும் பார்வை, இரை தேடி பூமிலதாங்க இருக்கும்னு தாமோதர ஆசான் சொல்லியிருக்காருங்க, ஆனா இந்த கவிஞர்களோட பறவ மட்டும் எப்பவுமே மேலேயே இருக்குதுங்க, ஒங்க பார்வைய கொஞ்சம் கீழே திருப்புங்க அண்ணாச்சி, மேலயே பாத்திக்கிட்டுருந்தா இங்க ஏதாவது தந்தி கம்பத்துல போய் இடிச்சுக்க வேண்டியது தான். ஒங்க நல்லதுக்கு சொல்றேன், மறுபடியும் தந்தி கம்பம் மேல்நோக்கி இருக்குனு நீங்க சொன்னா உங்கள திருத்த முடியாதுன்னு சொல்றதத்தவிர எனக்கு ஒண்ணும் தோணலீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியா ஒண்ணு சொல்றேங்க; மரம், செடி, பறவை, பூச்சி, மிருகம் எல்லாம் கவித புஸ்தகத்துல இருக்குதுங்க, ஏதோ காட்டுக்குள்ளேயோ அல்லது மிருகக்காட்சி சாலைக்குள்ளேயிருந்து எழுதியிருக்கீங்க போல, ஆனா நான் சின்னப் பையங்கறதுனால `ஜு' சுத்திப்பாத்த திருப்தி இருக்குங்க அண்ணாச்சி. ஆனா எனக்கு அடுத்த புத்தகத்துல எலக்ட்ரிக் ட்ரெயின், மேம்பாலம், பறக்கும் ரயில் பத்தி எழுதுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு அண்ணாச்சி;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா சத்தம் போடறது கேக்குது அண்ணாச்சி, மளிகை கடைய விட்டு என்ன படிப்பு வேண்டிக்கிடக்குனு கேக்கறாருங்க, ஒங்க புத்தகத்த ஒளிச்சு வச்சு படிக்கும் போதுதாங்க எலி இழுத்துகிட்டு போயிடிச்சு; `மனப்பறவை' கிட்ட கொஞ்சம் சொல்லி மீட்டுக்குடுங்க, ஆனா `எலி' வச்சுருக்கறதே சேஃப்டி அண்ணாச்சி, இங்கவந்துதுன்னா எங்க அப்பா பொட்டலங்கட்ட எடுத்துக்குவாரு. வரட்டுமா அண்ணாச்சி,&lt;br /&gt;&lt;br /&gt;என்னிக்கும் அன்புடன்,&lt;br /&gt;உங்கள் கோயில் ராஜ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30723530-115970284031603324?l=chithaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chithaivu.blogspot.com/feeds/115970284031603324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30723530&amp;postID=115970284031603324' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30723530/posts/default/115970284031603324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30723530/posts/default/115970284031603324'/><link rel='alternate' type='text/html' href='http://chithaivu.blogspot.com/2006/10/blog-post.html' title='ராஜமார்த்தாண்டனுக்கு திருநெல்வேலி கோயில் ராஜ் கடிதம்'/><author><name>muthu_r</name><uri>http://www.blogger.com/profile/13312349951563352504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30723530.post-115933009380990493</id><published>2006-09-26T21:03:00.000-07:00</published><updated>2006-09-26T22:04:48.166-07:00</updated><title type='text'>கம்யூனிசத்தின் கறுப்பு புத்தகம்(The Black Book of Communism)</title><content type='html'>கம்யூனிசத்தின் கறுப்பு புத்தகம்(The Black Book of Communism)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுரை `Adam Shatz' ன் "The Guilty Party" என்ற கட்டுரையை அடியொட்டி எழுதப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;-ஆர். முத்துக்குமார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1946-ல் ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிக்கை நிருபரான இல்யா எஹ்ரன்பரக் மற்றும் நாவலாசிரியரான வாசிலி கிராஸ்மேன் என்பவரும் சேர்ந்து, `கறுப்புப் புத்தகம்' The Black Book)) என்ற ஒரு அறிக்கை நூலை வெளியிட்டனர். அதில் சோவியத் யூதர்களுக்கு எதிரான ஜெர்மன் பயங்கரவாதப் பிரசாரத்தை அம்பலப்படுத்தியிருந்தனர். ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் இந்தப் புத்தகம் வந்ததாகையால், அவருக்கு இந்தப் புத்தகம் பிடிக்கவில்லை. ஏனெனில் அந்நூலில் ஹிட்லரின் யூதப்படுகொலைப் பற்றி அதிகமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், சோவியத் ருஷ்யாவின் ரெட் ஆர்மி என்பது பாசிசத்தை அதன் யூத இனத்துவேஷத்திற்காக எதிர்க்கவில்லை என்பதாக, சோவியத் சர்வாதிகாரிக்கு ஒரு அடி கொடுத்திருந்தது. இது போன்ற தருணங்களில், ஸ்டாலின் தான் வழக்கமாகச் செய்வதையே செய்தார். அந்தப் புத்தகத்தை தடை செய்தார். ஸ்டாலின், ஆனாலும், இந்நூல் வழக்கம் போலவே ரகசியப் பண்பாடாக இயங்கிவந்த Samizdat'- இடம் நுழைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அரை நூற்றாண்டிற்குப் பிறகு, ஒரு `புதிய கறுப்புப் புத்தகம்' வெளியானது. ஆனால் இம்முறை நாஜிகளின் அடக்கு முறை பற்றி அது பேசாமல், கம்யூனிசத்தின் பேரால் அடக்கி ஆண்டு, வாசிலி கிராஸ்மன் புத்தகத்தை தடைசெய்த ஒரு ஆட்சிப் போக்கைப் பற்றியதாக இருந்தது.`கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம்' The Black Book of Communism)) என்ற இந்த புதிய நூல், பிரெஞ்சு வரலாற்றியலாளர்களால் எழுதப்பட்டு, 1997- அக்டோபர் இறுதியில் வெளியானது.இந்த நூல், மூன்றாம் உலகத்தின் மேல் சிகப்பு கொடி பறக்க விட்ட சோஷலிச அரசாங்கத்தின் குற்றங்கள், பயங்கரங்கள் மற்றும் அடக்கு முறையைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.நான்கு வருடங்களுக்கு முன் 1997 -ல் இந்நூல் பிரான்சில் வெளியிடப்பட்டபோது, - அதாவது அக்டோபர் புரட்சியின் 80-ம் நூற்றாண்டு விழாவின் போது - அது அறிமுகப்படுத்தப்பட்டபோது - மிகப்பெரும் சினத்தையும், கலகத்தையும் பற்ற வைத்தது. அப்படி அதில் என்னதான் கூறப்பட்டிருக்கிறது :நாஜிசம் செய்த படுகொலைகளை விட கம்யூனிசம் செய்த படுகொலைகள் அதிகம்' என்பதே அது. மிகவும் கலகபூர்வமானது&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் அந்த 858-பக்க புத்தகத்திற்கு ஆராய்ச்சி செய்து பங்களித்தவர்களுக்கே, தர்மசங்கடமான ஒரு சினம் எழுந்தது. ஹார்வர்டு வெளியீட்டின் அட்டையில் ஆறு பேரை பட்டியல் போட்டு இருக்கிறது, அதாவது அவர்கள் எல்லோரும், ஏதோ ஒரு `எதிர்கம்யூனிச முன்னணி' துவங்கி விட்டார்கள் என்பது போல் இருந்தது போன்ற ஒன்றை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள், கம்யூனிசத்தின்பால் இருந்த மாயையிலிருந்து வெளிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்தத் தோற்றம், எப்போதும் போலவே, பொய்மையானதே, நமது நூற்றாண்டின் ரகசிய வரலாறு நமக்கு சொல்லிக் கொடுத்ததைப்போல்.இந்த நூல் வெளிவந்து சில வாரங்களுக்கு பிறகு, இந்த நூலில் சிறப்புப் பங்களிப்பை செய்த ரஷ்ய வரலாற்றாசிரியர் நிகோலஸ் வெர்த் மற்றும் சீன நிபுணரான ஜான் - லூயிஸ்-மர்கோலின் போன்றவர்கள் இந்நூலின் தொகுப்பாசிரியரான `ஸ்டீபன் கர்ட்டாய்'ஸை பல நேர்காணல்களிலும், கட்டுரைகளிலும் கடுமையாக எதிர்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரலாற்று நிபுணர்கள் ஸ்டீபன் கர்ட்டாய்ஸ் அந்த நூலின் அறிமுகத்தில் பன்னாட்டு கம்யூனிசத்தை "அமைதிக்கு எதிரான குற்றமாகவும், போர் குற்றங்கள் செய்ததாகவும், மனித சமூகத்திற்கு எதிராக குற்றங்களை இழைத்ததாகவும்" போன்று குற்றம் சாட்டப்பட்டதற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், கம்யூனிசத்தின் சக பயணிகளை `பொது விலை மாதர்கள்' என்பது போல் குறிப்பிட்டது, பங்களிப்பு செய்த நிபுணர்களுக்கே மிகுந்த சினத்தை கிளப்பியது. எல்லாவற்றையும் விட மோசமானதாக இவர்கள் சொல்வது என்னவெனில், ஸ்டீபன் தன் அறிமுகத்தை நூல் வெளியிடப்படுவதற்கு முன்னால் படிக்க அனுமதிக்கவில்லை என்பதே. அக்டோபர் 31-ல் வெர்த், மற்றும் மர்கோலின் `Lemonde' பத்திரிகையில் மேற்கோளாகக் காட்டியது வெளிவந்தது. அதாவது ஸ்டீபன் தன் அறிமுகத்தில் "கம்யூனிசத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை அழித்து, அதன் கீழ் நடந்த படுகொலைகளின் எண்ணிக்கையை ஊதிப்பெருக்குகிறார்" என ஸ்டீபனை தோலுரித்தார்கள்.இந்த நூலிற்கான அறிமுகம் முதலில், முன்னாள் கம்யூனிசவாதியும், பிரெஞ்சுப் புரட்சி வரலாற்றாசிரியர்களின் - கல்வியியல் முதல்வருமான பிரான்சுவா ஃப்யுரெட்டிடம் ஒப்படைக்கப்பட்டது, ஆனால் அவர் இறந்துவிடவே இந்தப் பொறுப்பு ஸ்டீபனின் தலையில் விழுந்தது. ஃப்யுரெட் ஏற்கனவே `கடந்து போகும் மாயைகள்' ((The Passing of an illusion)என்ற தன் புத்தகத்தில் கம்யூனிஸ்டுகளின் அநீதிகளையும், இவருக்கு அதனுடன் இருந்த உறவுகளையும் பற்றிய ஒரு ஆய்வை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஃடீபன் கார்ட்டியஸ் மிகவும் விஷத்தனமாக, லெனின், ஸ்டாலின், கேஸ்ட்ரோ' மற்றும் இன்னும் ஒரு டஜன் பேர்களை பெருவாரியான அநீதிகளை முழு முதல் அரசாங்கமாக மாற்றியவர்கள்" என கடும் தாக்குதல் தொடுக்கிறார்.மேலும் அவர் கூறியுள்ளார் "(கம்யூனிசமும், படுகொலைகளில் நாஜிசத்திற்கு சளைத்ததல்ல; நாஜிசம் 25 மில்லியன் பேர்களை கொன்று குவித்தது என்றால் கம்யூனிசம் 100 மில்லியம் பேர்களை கொன்றது' என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ஹன்னா அரெண்ட் கூறுவது போல் நாஜிஸத்தை விட' என்று கூற முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நாஜிசம் போலவே கம்யூனிசமும் ஒரு `தீவிரமான தீமை' என்பது போல் ஸ்டீபன் குறிப்பிடுகிறார்.ஆனாலும் ஸ்டீபன் தனது விவாதங்களை, ஜெர்மன் திருத்தவ்வாத வரலாற்றியலரான எர்னஸ்ட் நோல்ட்டின் `குற்றங்களிலிருந்து விடுவிக்கின்ற' தன்மையுள்ள விவாதங்களிலிருந்து வேறுபடுத்திக் கொள்கிறார். எர்னஸ்ட் நோல்ட் ஸ்டாலினின் உக்ரேனிய குலாக்குகளுக்கு எதிரான நடவடிக்கையை `நிஜமான இனப்படுகொலை' என்பதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இவர் போருக்குப் பிந்தைய காலக்கட்டங்களில் யூதர்படுகொலைகளை வறட்டுத்தனமாக கம்யூனிஸ்டுகள் ஊக்குவித்ததை எதிர்ப்பதில் அவ்வளவு கவனமாக வாதங்களை கையாளவில்லை.உண்மையில் யூதப்படுகொலைகள் பற்றி பிரெஞ்சு அறிவுஜீவிகளுக்கு 1980-ல் தான் தகவல்கள் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ரால் ஹில்பர்க் என்பவரின் "ஐரோப்பிய யூதர்களின் படுகொலை" என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்ட பிறகே. அலெக்சாந்தர் ஸோல்ஷெனிசின் வெளிச்சம் போட்டுகாட்டிய் ரஷ்ய குலாக் அதிக கவனம் பெறப்படுகிறது.14 கட்டுரைகள் கொண்ட `கம்யூனிசத்தின் கறுப்புப்புத்தம்' என்ற நூலில், இரண்டு கட்டுரைகள், மிகவும் ஆழமாக விஷயங்களை வரலாற்றுத் தரவுகளுடன் ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும். வெர்த் என்ற கட்டுரையாசிரியரின் இந்த நூலில் உள்ள சிறுபுத்தகம் அளவுள்ள ரஷ்யா பற்றிய கட்டுரையும், மர்கோலின் என்பவரின் மாவோ காலத்திய கருத்தியல் ரத்த காவுகளைப் பற்றிய, கட்டுரையும் சிறப்பான கட்டுரைகள்.`கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம்' என்ற இந்தப் பெரிய நூலில் `மக்களுக்கு எதிராக அரசு' என்ற தலைப்பில் வரும் வெர்த்தின் கட்டுரையில், ரஷ்ய சிவில் யுத்தத்தின் முந்தைய வருடங்களில் `அரசு பயங்கரவாதம்' எவ்வாறு அரசாங்கத்தின் வழிமுறைகளாக இருந்து வந்திருக்கிறது என்பதையும், லெனினும், போல்ஷெவிக்குகளும் எவ்வாறு ஸ்டாலினி சக்திற்கு அடிப்படைகளை நிறுவினர், என்பதையும் தோலுரித்து அலசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தானியம் கொடுக்க மறுத்த போராளி விவசாயிகளின் மேல் பாய ராணுவப் படைகளை ஊக்குவித்தார் லெனின்.லெனின் தனது காம்ரேட் ஜினோவியெவ் என்பவற்கு கடிதம் எழுதுகையில் "பெரும்பயங்கரம் என்ற சக்தியை உபயோகிக்க வேண்டும்" என்கிறார். போல்ஷே விக்குகளுக்கு, உக்ரெய்னில் யூதப் படுகொலைகள் செய்த யூத துவேஷ வெள்ளை ரஷ்ய ராணுவத்தினரின் பகைமை இருந்த போதிலும், விவசாயிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை திறம்படவே செய்ய முடிந்தது. போல்ஷெவிக்குகள், தங்கள் படுகொலைகளை, மிகவும் திட்டவட்டமாகவும், பறந்து பட்ட அளவிலும், ஒழுங்கு முறைக்குட்பட்டு செய்தனர் என்று வாதிடுகிறார் கட்டுரையாசிரியரான வெர்த்.1919-20-கிராமப்படுகொலைகளுக்கு இம்முறை பங்களிப்பை செய்தது சோவியத் லட்சியவாதம், இது இவர்களை, வர்க்கத்தின் பேரால் படுகொலை செய்வதை அனுமதித்தது, அதாவது பழைய உலகம் அழிந்து புதியது பிறக்கும் போதான கஷ்டமே இது என கொலைகளை நியாயப்படுத்தியது.அப்போது வெளிவந்த ஒரு தினசரியில் : `நம் ஒழுக்கத்திற்கு முன் மாதிரி எதுவும் இல்லை, நம் மனிதம் பரமார்த்திகமானது, ஏனெனில் இது `புதிய லட்சியத்தில்' வேரூன்றியிருக்கிறது. நமக்கு எல்லாமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் நாமே மானுடத்தை அதன் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கிறோம்... ரத்தம்? அது தண்ணீர் போல் ஓடட்டும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெர்த்தைப் பொறுத்தவரையும், சுதந்திரமான விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய பூசல்கள் - 1930 ல் அவர்களை அப்புறப்படுத்துவதற்கான தீர்மானங்களை திறந்து விட்டிருக்கிறது. குறிப்பாக ஸ்டாலின் ஆட்சியில் அவர் `பசி' யை புறவயமான நட்பமாக பிரயோகிக்கவைத்து, குலாக்குகளை பட்டினி போடுவதன் மூலம் வேளாண்மையை கூட்டுறவாக்கும் போக்கிற்கு வழிவகுத்தது.துரதிர்ஷ்டவசமாக `கம்யூனிசத்தின் கறுப்பு புத்தகம்' என்ற நூலில் வெர்த் மற்றும் மர்கோலின் போன்றவர்களின் பங்களிப்பு மட்டுமே ஆய்வு பூர்வமாகவும், தரவு பூர்வமாகவும், சிறப்பானதாக அமைந்திருக்கிறது. ஸ்டீபனின் கம்யூனிசத்திற்கெதிரான `வனசமாரி' அறிமுகத்துடன் இந்நூல் முடிந்துவிடுவதில்லை. ஸ்டாலின், மாவோ, பால்பாட்-அநீதிகளையும், குற்றங்களையும் நாம் மறுக்க முடியாது, ஆனாலும் இந்நூலில் காணப்படும் `லத்தீன் அமெரிக்காவில் கம்யூனிசம்' பற்றி மிகவும் ஒரு தலைப்பட்சமாகவே கையாளப்பட்டுள்ளது. இந்த தரவுகளை அமெரிக்க அரசாங்க அறிக்கைகளிலிருந்தே நாம் பெற முடியும் என்ற அளவிற்கு பலவீனமானதாக அமைந்திருக்கிறது. சாந்தினிஸ்டா நிகாரகுவாவின் போரில் மாண்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் நமக்கு தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த மரணங்கள், அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த `காண்ட்ரா' இயக்கத்தினரால் நடந்ததேயாகும். கியூபா பற்றிய பாஸ்கல் ஃபோன்டேனின் கட்டுரையில், செகுவெராவை கொள்கைப் பிடிவாதமுள்ளவராகவும், சகிப்புத் தன்மை, பொறுமையற்றவராகவும், சித்தரிக்கப்படுகிறது. "... அவரிடம் கியூபாவின் மரபார்ந்த திறந்த மனப்பான்மையோ, கியூப உணர்வோ இருக்கவில்லை" சேகுவாரோ ஒரு அர்ஜென்டைனியர்" என்கிறார் பாஸ்கல். பாட்டிஸ்டாவின் ஆதிக்கவாத கியூபாவை, இனவாத அரசாகவும், அங்கு கறுப்பர்கள் இரண்டாம் தர குடிமகன்களாகவுமே அங்கீகரிக்கப்பட்டனர் என்றும், சொத்து சமமாக பகிரப்படவில்லை, போன்றவைகளை கட்டுரையாளர் பாஸ்கல் ஒப்புக் கொண்டாலும், செகுவேராவின் எதிர்ப்பு சமூக அநீதியால் விளையவில்லை, அவருடைய அமெரிக்க - எதிர்ப்பால், வெறுப்பால் உண்டானதே என்கிறார் பாஸ்கல். ஆனாலும் எங்குமே, செகுவேராவின் அமெரிக்க - எதிர்ப்பிற்கான நியாயம் இவர் கட்டுரையில் காணப்படவில்லை. உதாரணமாக கியூபாவின் உள்-நாட்டு அரசியலில் அமெரிக்கா தலையிட்டு, கவுத்தமாலாவின் ஜனநாயக சீர்திருத்தவாதியான ஜேக்கபோ ஆர்பென்ஸை தூக்கியெறிய திட்டம் போட்டு வெற்றி கண்டதைப் பற்றிய குறிப்பு இவரது கட்டுரையில் காணப்படவில்லை. ஆனாலும், கியூபா சிறைச்சாலைகள் பற்றிய முக்கியமான, மற்றும் மனதைப் பிழியும் தரவுகளை அளிக்கிறார் பாஸ்கல்.கியூபா கம்யூனிசம் மனித உரிமை மீறல்கள் செய்திருப்பினும், அங்கு மருத்துவம், கல்வியில் நிகழ்ந்த மாற்றம், லத்தீன் அமெரிக்க, ஆஃப்ரிக்க புரட்சியாளர்களைக் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.`கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம்' என்ற நூலின் ஆசிரியர்கள், இந்த இயக்கம் ஓரளவுக்கு நாஜிசத்தையும், கறுப்பரின துவேஷத்தையும் களைந்தது என்பதற்கான இடம் கூட கொடுப்பதாகத் தெரியவில்லை. கம்யூனிசம் என்ற லட்சியவாதம் பல அழிவுகளை நடத்தியிருப்பினும், இதே லட்சிய வாதம், சில நாடுகளில் மனசாட்சி உள்ளவர்களை தட்டி எழுப்பியிருக்கிறது, பாசிசமோ, நாஜிசமோ இதைச் செய்ததாக என்றுமே கூறு முடியாது.இந்தப் புத்தகம் பிரான்சில் அறிவுஜீவிகளிடையே ஏற்படுத்திய பரபரப்பு அமெரிக்காவில் ஏற்படுத்தவில்லை. மிகப்பெரிய திட்டமாக எழுதப்படவேண்டிய ஒரு நூலை வெறும் `எண்ணிக்கை விளையாட்டாக' மாற்றிவிட்டதாகவே அமெரிக்க அறிவு ஜீவிகள் கருதுகின்றனர்.இந்தப் புத்தகம் பிரான்சு நாட்டு நாடாளுமன்றத்தையே கலக்கியது என்றுதான் கூற வேண்டும், நவம்பர் 12- அன்று மைக்கேல் ஹாய்சின் என்ற ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முக்கியப் பிரமுகர், சோஷலிசக் கட்சியின் பிரதம மந்திரியை அவரது கட்சியின் பிரெஞ்சு கம்யுனிஸ்டுகளுடனான கூட்டணியைப் பற்றி கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கிறார், அதற்கு பதிலளித் சோஷலிசக் கட்சியின் பிரதம மந்திரி லயோனல் ஜோஸ்பின், ஸ்டாலின் ஆட்சியின் பயங்கரங்களை ஒப்புக் கொண்டு, பிரான்சைப் பொறுத்தவரையில், `இரண்டாம் உலகப்போர்' என்ற மாபெரும் வரலாற்று நிகழ்வின் காலக்கட்டத்தில் கம்யுனிஸ்டுகளே தேச பக்தியுடன் போராடினர், அதனால் எங்கள் கட்சியில் அவர்கள் இணைந்திருப்பது குறித்து தனக்குப் பெருமையே என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஏன் `கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம்'? `முதலாளியம் என்ற கறுப்புப் புத்தகம்' ஏன் இல்லை? முதலாளியம், என்ற ஒன்று ஆதிமுதலே இருந்து வருவதுதான், அது செய்யும் அநீதிகளின் ஒரு எதிர்வினை நோய்க்கூறு வடிவம்தான் கம்யூனிசமா? இந்தக் கேள்விக்கு விடைகாண முடியுமோ முடியாதோ. ஆனால் `கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம்' மிகச் சிறந்த வரலாற்று ஆவணநூல் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30723530-115933009380990493?l=chithaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chithaivu.blogspot.com/feeds/115933009380990493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30723530&amp;postID=115933009380990493' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30723530/posts/default/115933009380990493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30723530/posts/default/115933009380990493'/><link rel='alternate' type='text/html' href='http://chithaivu.blogspot.com/2006/09/black-book-of-communism.html' title='கம்யூனிசத்தின் கறுப்பு புத்தகம்(The Black Book of Communism)'/><author><name>muthu_r</name><uri>http://www.blogger.com/profile/13312349951563352504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30723530.post-115217356475497019</id><published>2006-07-06T01:06:00.000-07:00</published><updated>2006-09-24T21:47:54.646-07:00</updated><title type='text'>நாட்டுப்பற்றும் அரசாங்கப்பற்றும்!</title><content type='html'>ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா என்ற வார்த்தை பிரயோகம் சற்று சிந்திக்கத் தூண்டுகிறது. இது வெறும் அமெரிக்கா மட்டுமா அல்லது லத்தீன் அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நைஜீரியா, இராக், மத்திய கிழக்கு படையெடுப்பு மற்றும் ஆக்ரமிப்பு முன்பு வியட்னாம் எண்ணற்ற கலகங்கள், எண்ணற்ற போர்கள் புரிந்து போலி ஜன நாயகத்தை நிலைனாட்டும் அலங்காரப்பேச்சுகளுடன் கூடிய அத்தனை அராஜகங்களையும் உள்ளடக்கிய ஐக்கியமா?&lt;br /&gt;நாட்டிற்காக உயர் துறந்த இளம் வீரர்கள், போர் பற்றி நாம் நேர்மையாக இருப்போம் போன்ற அரசு சார்,  அமெரிக்க பத்திரிக்கை சார்பு சுதந்திர அலங்கார வெற்றுச் சொற்கள் புழங்கதுவங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;உயிரை தியாகம் செய்தவர்கள் நாட்டிற்காக செய்யவில்லை அரசாங்கத்திற்காக செய்கிறார்கள் அதன் அராஜக வெளியுறவு கொள்கைகளுக்காக செய்கிறார்கள். அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் வேறுபாடு கற்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரகடனம் ஜூலை 4ம் தேதி அமெரிக்க தலைகளின் உதடுகளிலும் பத்திரிக்கை பேனா முனைகளிலும் நெளியும் வார்த்தை ஆனால் அதன் அர்த்தம் பற்றிய அறிவு மருட்சியுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க சுதந்திர பிரகடனம் என்ன கூறுகிறது? அரசாங்கங்கள் என்பது செயற்கையான உருவாக்கமே, மக்களின் ஒப்புதலுடன் கூடிய நியாயமான அதிகாரங்களை வருவித்துக் கொள்வது, அனைவருக்கும் சமமான வாழ்வு,  சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை அது வலியுறுத்துகிறது, இதற்கு எதிரான அல்லது இதனை சிதைக்கும் எந்த ஒரு அரசையும் நீக்குவது அல்லது தூக்கி எறிவது மக்களின் உரிமை என்று கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித வாழ்வின் புனிதமும் சுதந்திரமும் முக்கிய கொள்கைகளாக பிரகடனிக்கப்படும் அமெரிக்க சுதந்திர தீர்மானத்தை அமெரிக்க அரசாங்கங்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. பனாமாவை படையெடுத்து ஆக்ரமித்தது ஆபரேஷன் ஜஸ்ட் காஸ் என்றும் இராக் போர் இராக் விடுதலை நடவடிக்கை என்றும் வர்ணிக்கப்படுகிறது. பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டது போல் இது மகிழ்ச்சியை நோக்கிய லட்சிய நகர்வு அல்ல மாறாக லாபம் மற்றும் அதிகாரத்திற்கான அராஜக விழைவு. அமெரிக்காதான் முக்கியம் என்ன தவறு செய்தாலும், இந்தியாதான் முக்கியம் அது என்ன தவறு செய்தாலும் என்ற போக்குகள் நாட்டுப்பற்று என்ற பெயரில் இருந்து வருவது வருத்தத்திற்குறிய விஷயமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை பிரிட்டீஷார் ஆண்டு வந்த அத்தனை ஆண்டுகாலங்களிலும் காங்கிரஸ், காந்தி,  சுதந்திரப்போர் ஆகியவையெல்லாம் அறியாமலேயே லட்சக்கணகான ஆதிவாசிகள் கொத்தடிமைகளாக இந்தியாவில் வாழ்ந்திருக்கின்றனர். மேற்கு வங்க காடுகளில் கொடூரமான ஆங்கிலேய, இந்திய பனியா சேட்டுகளின் கொடுங்கோல்களுக்கு ஆளான முண்டா இனம் பற்றி நம் வரலாற்று பாடப்புத்தகத்தில் கிடையாது. பாடத்திட்டத்தை இடது சாரிகள் கைவசம் வைத்திருந்தாலும் ஆதிக்க காங்கிரஸ் அல்லது மத பயங்கரவாத ஆர் எஸ் எஸ்-பாஜக வைத்திருந்தாலும் நாம் இந்த அடித்தட்டு மக்கள் வரலாற்றை அறியவே முடியாது. மேட்டுக் குடி வரலாற்று எழுத்தாளர்கள் சுதந்திரப்போரை வெறும் மேட்டுக்குடி போராட்டமாகவே சித்தரித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த போராட்டங்களில் பெரும்பகுதி அதிகார மாற்றத்திற்கும், மாறும் அதிகாரத்தில் சாதி மற்றும் வர்க்க பங்குகளுக்காகவும் விழைவு கொண்டவைகளே என்பது குறிப்பிடக்கது.&lt;br /&gt;இன்னமும் ஆதிவாசிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் முற்றுப்பெறவில்லை. நர்மதை நதி அணையை உயர்த்துவதில் ஏகப்பட்ட ஆதிவாசிகளின் வாழ்வு பறிக்கப்படும் என்று அனைத்து தரப்பினரும் எடுத்துக் கூறியும் குஜராத் காங்கிரஸ் மற்றும் பாஜக அதனை ஒரு லட்சியமக கொண்டுள்ளது. அதனை எதிர்ப்பவர்கள் மீது வழக்கு, புறக்கணிப்பு போன்ற அச்சுறுத்தல்களை தொடுத்துவருகிறது. திட்டத்தால் அப்புறப்படுத்தப்பட்டவர்களுக்கு பணம் கொடுப்பது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தும் பணம் கைமாறுகிறது. நிலம்தான் கொடுக்கவேண்டும். மருத்துவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நியாயமற்ற முறையில் ஆர்பாட்டம் செய்த போது நீதித் துறை ரொம்ப பொறுப்பாக மூக்கை நுழைக்கிறது. இது மட்டுமல்ல இன்னமும் தனக்கு தேவையில்லாத மற்றும் அதிகாரமில்லாத பிரதேசங்களில் எல்லாம் உச்ச நீதிமன்றம் மூக்கை நுழைக்கிறது. தனது தீர்ப்பை எதிர்த்து செயல்படும் குஜராத் அரசு விவகாரத்தில் கப்சிப்பென்று இருக்கிறது. ஆனால் இந்தியா ஒளிர்கிறது என்ற கூக்குரல் நாடு முழுதும் ஒலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அமெரிக்கா ஒழிக என்று கூறிவிட்டு இங்கிருக்கும் மேட்டுக்குடிகள் அதில் ஒளிந்து கொள்ளமுடியாது, அமெரிக்கா பிற ஏழை நாடுகளுக்கு செய்வதை இந்தியாவின் கார்ப்பரேட் ஆட்சி உள் நாட்டு ஏழைகளுக்கு செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுப்பற்று என்பது உண்மையான பொருளில் புரிந்து கொள்ளப்படவேண்டுமென்றால் ஜன நாயகத்தின் கொள்கைகளுக்கு அது இசைவதாக இருக்கவேண்டும். பிலிப்பைனின் சிறு தீவில் ரூஸ்வெல்ட்டின் ராணுவம் நுழைந்து குழந்தைகளையும் பெண்களையும் கொன்றது குறித்து ரூஸ்வெல்ட் பாராட்டினால் அவர் நாட்டுப்பற்று உடையவரா?&lt;br /&gt;&lt;br /&gt;மேதா பட்கர் நர்மதை நதி பாதுகாப்பிற்காகவும், மும்பை குடிசை இடிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் ஏழைகளுக்காகவும் உண்ணா விரதம் இருந்தால் அவர் மீது ஏகப்பட்ட வழக்குகளை தொடுக்கும் அதாவது பொது நல வழக்கு என்று அதற்கு ஒரு அசிங்கமான பெயர் வேறு, அரசாங்கத்தை வழி நடத்தும் தலைவர்கள் நாட்டுப்பற்று உடைவர்கள் என்று பொருளா?&lt;br /&gt;இன்று ஆப்கான் மற்றும் இராகில் உயிர் விடும் ராணுவத்தினர்கள் நாட்டுப்பற்றிற்காகவா உயிர் துறக்கிறார்கள்? இவர்கள் அரசாங்கத்திற்காக உயிர் விடுகிறார்கள். எண்ணெய் முதலாளிகளுக்காவும் அமெரிக்காவை விரிவு படுத்தவும் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட தலைவர்களின் அரசியல் அரைகுறை லட்சியங்களையும் நிறவேற்ற உயிர் துறக்க வைக்கப்படுகின்றனர். அமெரிக்க அரசிற்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கலின் சுரண்டலுக்கும் நட்பு ரீதியாக உள்ள எதேச்சதிகாரிகளியும் கொடுங்கோலர்களையும் அமெரிக்கா லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட சிறிய நாடுகளில் ஆனால் எண்ணெய் வளம் நிரம்பிய நாடுகளில் ஆதரித்து வருகிறது. கியூபாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சுதந்திரம் என்பதை மறு விளக்கத்திற்கும் மறு வாசிப்பிற்கும் உட்படுத்தவேண்டும், இதன் குறுகிய தேசியவாத நலந்களை தகர்த்து எறியவேண்டும். அமெரிக்க நலனுக்காக உலகமயமாதல் என்றபெயரில் தேச எல்லைகள் அராஜகமாக விஸ்தரிக்கப்படும்போது, அதன் காரணங்களே மனித நலத்திற்கும் நீதிக்கும் முட்டுக்கட்டைகளாக அமைந்து விடுவதில்லையா?&lt;br /&gt;கோதுமை விளைச்சலை தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் முன்னேற்றம் வளர்ச்சி என்ற பெயரில் இந்தியா தாரை வார்த்து பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை எந்த நாட்டுப்பற்றுடன் சேர்ப்பது என்று தெரியவில்லை.  மக்களுக்கென்று அரசாங்கத்திற்கான சில கடமைகள் உள்ளது. அதனை லாப நட்ட கணக்குகளுக்குள் சொருகி டர்பனில் சொருகிக் கொள்ளமுடியாது. தேசம் என்பது கார்ப்பரேட் கம்பெனியல்ல என்பதை உணரும் அரசாங்கமே தேசத்திற்கும் மக்களுக்கும் நியாயமாக இருக்கமுடியும்.&lt;br /&gt;ஜூலை 4 மட்டுமல்ல ஆகஸ்ட் 15ம் தேதியையும் நாம் மேற்சொன்ன பிரக்ஞையுடன் அணுகுவதே அறிவு பூர்வமானது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30723530-115217356475497019?l=chithaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chithaivu.blogspot.com/feeds/115217356475497019/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30723530&amp;postID=115217356475497019' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30723530/posts/default/115217356475497019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30723530/posts/default/115217356475497019'/><link rel='alternate' type='text/html' href='http://chithaivu.blogspot.com/2006/07/blog-post.html' title='நாட்டுப்பற்றும் அரசாங்கப்பற்றும்!'/><author><name>muthu_r</name><uri>http://www.blogger.com/profile/13312349951563352504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry></feed>
